சுவாட் அமைப்பின் தலைவர் பரமசிங்கம் விபத்தில் சிக்கி உயிரிழப்பு





.சுகிர்தகுமார் 0777113659 


 அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் மற்றும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் அவர்கள் நேற்றிரவு (28) விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அலுவலக வாகனத்தில் கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கி  பயணித்துக்கொண்டிருந்தபோதே வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
விபத்தில் வாகனத்தின் சாரதியும் கொழும்பு நோக்கி பயணம் செய்த மற்றுமொரு உத்தியோகத்தரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த வ.பரமசிங்கம் சுவாட் அமைப்பின் நீண்ட கால உத்தியோகத்தர் என்பதுடன் தற்போது அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவராகவும் மற்றும் சுவாட் அமைப்பின் தலைவராகவும் செயற்படுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கனுடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இனநல்லுறவு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தியவர் என்பதுடன்; அம்பாரை மாவட்டம் மாத்திரமன்றி தேசிய ரீதியிலும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பாடுபட்டவர்.
அன்னாரது இழப்பு தொடர்பில் பல்வேறு அரச அரசசார்பற்ற நிறுவனங்களும் சமூக அமைப்புக்களும் தனிநபர்களும் ஆழ்ந்த அஞ்சலியினை தெரிவித்து வருகின்றனர்.