பரிசளிப்பு விழா



 


( காரைதீவு  சகா)


சம்மாந்துறை வலய நாவிதன்வெளி கோட்டத்தில் பின்தங்கிய ஏழாம் கிராமம் நாமகள் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலய அதிபர் எம்.இலங்கேஸ்வரன்  தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பாக இடம் பெற்றது .

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாசிர் அரபாத் முகைதீன் கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம். நைரூஸ்கான், வி.ரி. சகாதேவராஜா, ஆசிரியஆலோசகர் கே. அற்புதராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.முன்னாள் அதிபர்களான சீ.பாலசிங்கன் மு.இராஜகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 மேலும் விழாவுக்கு அனுசரணை வழங்கிய கொடையாளிகள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்கள்..

 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கே. நிவ்ஜன் உள்ளிட்ட ஏனைய மாணவர்களும் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற சகல மாணவர்களுக்கும் பதக்கங்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.