மாபெரும் சிரமதானம்




 


பாறுக் ஷிஹான்



டெங்கு கட்டுப்பாட்டு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுநரின்  அறிவுறுத்தலின்விசேட டெங்கு ஒழிப்பு தினமாக இன்று மே 16ஆம் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாடசாலைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் காணப்படும் அனைத்து குப்பைகள்,கால்வாய்கள், சாக்கடைகள் மற்றும் நுளம்பு வளரக்கூடிய இடங்களை சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/கமு/அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  பாடசாலை அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா தலைமையில் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 இதன் போது இந்நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன்  நிந்தவூர் அல் - மதீனா மகாவித்தியாலயத்திலும் அதிபர் எம் எல் எம் நிஹாறுடீன்  தலைமையில் இதே போன்ற மாபெரும் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.