கௌரவ நீதிபதிகளுக்கான வருடாந்த (2024) இடமாற்றங்கள்





நீதிச்சேவை ஆணைக்குழுவினால், கௌரவ நீதிபதிகளுக்கான 2024ம் ஆண்டுக்கான இடமாற்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதனடிப்படையில், பொத்துவில் நீதிமன்ற நீதிபதி கௌரவ றிஸ்வான் அவர்கள், அக்கரைப்பற்றுக்கு இடாற்றம் பெற்று வருகின்றார்.
 அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி ஹம்சா அவர்கள் மட்டக்கப்பிற்கும் மட்டக்களப்பு கௌரவ நீதிபதி பீற்றர்போல் அவர்கள் பண்டாரவளைக்கும்,பண்டாரவளை நீதிபதி திருமதி ஜீவராணி, திருமலை மேலதிக நீதிவானாகவும், மட்டக்களப்பு மேலதிக நீதிபதி சததாத் அவர்கள் அம்பாரை மேலதிக நீதிபதியாகவும், மட்டக்களப்பு மேலதிக நீதிபதியாக தர்சினி அவர்களும் , பொத்துவில் நீதிபதியாக ஜமீல் அவர்களும்  2024 ஜனுவரி 5 முதல் கடமையேற்கவுள்ளனர்.