இறக்காமம்,புகைப்பட கண்காட்சியில்




 


(வி.ரி.சகாதேவராஜா)


இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி ஏற்பாடு செய்திருந்த புகைப்பட கண்காட்சியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்தின் அழகியல் பிரிவுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சுந்தரம் ஸ்ரீதரன் கலந்து சிறப்பித்தார்.


இப் புகைப்பட கண்காட்சி 
 கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். அமீன் ஹிதாயா மீராலெவ்வை இணை பாடத்திற்கு  பொறுப்பான உதவி அதிபர் ஏ.எம்.எஸ். இர்பானா ஆகியோர் தலைமையில் நேற்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கௌரவ அதிதியாக  சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் அழகியல் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். அப்துல் முனாப் கலந்து சிறப்பித்தார். மேலும் கல்லூரியின் ஆசிரியர்களான எஸ்.எல்.எம். குத்தூஸ் வி.ரி.  ரிஸ்வானா எம்.ஐ. றிப்கா ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.


இதில் இறக்காமம் பிரதேசத்தை ஒட்டிய  காட்சிகளாக 200 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது மாணவர்களின் திறன்களை வெளிக்காட்டி இருந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும் என்று பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார்.