மாளிகைக்காட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை





 நூருல் ஹுதா உமர் 


ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பாப் பிரசங்கமும் புதன்கிழமை (10) மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் வழமைபோன்று இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பெருநாள் தொழுகையும் குத்பாப் பிரசங்கமும் அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். மின்ஹாஜ் (உஸ்மாணி) அவர்களால் நடத்தப்பட்டன.

நோன்புப் பெருநாள் தொழுகையில் மார்க்க அறிஞர்கள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளா்கள், புத்திஜீவிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.