தேசிய மக்கள் சக்தியின், பெண் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்







 தேசிய மக்கள் சக்தியின் மூன்று பெண் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்


காத்தான்குடி நகர சபைக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் மூவர் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  கந்தசாமி பிரபு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


காத்தான்குடி நகர சபைக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களான

செல்வி ARF.மர்வாஹ். ஜனாபா அமுனா சிபான், ஜனாபா M.M.ஆரிபா உம்மா ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


இதில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் நசீர் உட்பட அதன் முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.


காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதற்கு மூன்று பெண் உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எம்.எஸ்.எம்.நூர்தீன்