அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வசமானது





 பிரதேச சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  கட்சி  சார்பில்   போட்டியிட்ட அப்துல் சமட் முகம்மது உவைஸ் என்பவர் 11 ஆசனங்களை பெற்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி  மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான   சாஹீர் பாஹீமா என்பவர்   03  ஆசனங்களை பெற்ற நிலையில்  08 மேலதிக வாக்குகளால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த உறுப்பினர்  அப்துல் சமட் முகம்மது உவைஸ்   புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.


அத்துடன்  நடைபெற்ற தவிசாளர் பகிரங்க   வாக்கெடுப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உறுப்பினர்கள்  04 பேர் வாக்களிப்பில் இருந்து நீங்கி   நடுநிலை வகித்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  கட்சி  சார்பில்  முன்மொழியப்பட்ட உறுப்பினர்  அப்துல் சமட் முகம்மது உவைஸ்    என்பருக்கு 11 வாக்குகளும்   ஏனைய தரப்பினரால்  புதிய  தவிசாளர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட    தேசிய மக்கள் சக்தி  கட்சி சாஹீர் பாஹீமா   என்பருக்கு 03   வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது. உப தவிசாளராக  தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத்   தெரிவு செய்யப்பட்டார்.ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக  உப தவிசாளராக  முகம்மட் பாரூக் றஜீத்   தெரிவானார்.

இந்த நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர்களான   உதுமாலெப்பை ஜனாதிபதி சட்டத்தரணி  நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்    என பலரும்  கலந்து கொண்டனர்.

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு  அட்டாளைச்சேனை   பிரதேச சபையை சுற்றி  பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.



உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.


இதன்போது அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  கட்சி  சார்பில்   போட்டியிட்ட அப்துல் சமட் முகம்மது உவைஸ் என்பவர் 11 ஆசனங்களை பெற்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி  மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான   சாஹீர் பாஹீமா என்பவர்   03  ஆசனங்களை பெற்ற நிலையில்  08 மேலதிக வாக்குகளால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த உறுப்பினர்  அப்துல் சமட் முகம்மது உவைஸ்   புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

அத்துடன்  நடைபெற்ற தவிசாளர் பகிரங்க   வாக்கெடுப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உறுப்பினர்கள்  04 பேர் வாக்களிப்பில் இருந்து நீங்கி   நடுநிலை வகித்ததுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  கட்சி  சார்பில்  முன்மொழியப்பட்ட உறுப்பினர்  அப்துல் சமட் முகம்மது உவைஸ்    என்பருக்கு 11 வாக்குகளும்   ஏனைய தரப்பினரால்  புதிய  தவிசாளர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட    தேசிய மக்கள் சக்தி  கட்சி சாஹீர் பாஹீமா   என்பருக்கு 03   வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது. உப தவிசாளராக  தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத்   தெரிவு செய்யப்பட்டார்.ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக  உப தவிசாளராக  முகம்மட் பாரூக் றஜீத்   தெரிவானார்.

இந்த நிகழ்வில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர்களான   உதுமாலெப்பை ஜனாதிபதி சட்டத்தரணி  நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்    என பலரும்  கலந்து கொண்டனர்.

புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு  அட்டாளைச்சேனை   பிரதேச சபையை சுற்றி  பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.