நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் பதவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசமானது
உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.இர்பான் தெரிவு
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆதம்பாவா அஸ்பரும் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.இர்பானும் தெரிவாகினர்
சட்டத்தரணி ஆதம்லெப்பை றியாஸ் ஆதம் என்பவர் 05 ஆசனங்களை பெற்ற நிலையில் 01 மேலதிக வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஆதம்பாவா அஸ்பர் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
அத்துடன் நடைபெற்ற தவிசாளர் இரகசிய வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் நடுநிலை வகித்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் ஆதம்பாவா அஸ்பர் என்பருக்கு 06 வாக்குகளும் ஏனைய தரப்பினரால் புதிய தவிசாளர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சட்டத்தரணி ஆதம்லெப்பை றியாஸ் ஆதம் என்பருக்கு 05 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது. உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான் தெரிவு செய்யப்பட்டார்.ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக உப தவிசாளராக சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான் தெரிவானார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் , அஷ்ரப் தாஹிர் , சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் என பலரும் கலந்து கொண்டனர்.புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது
Post a Comment
Post a Comment