விழிப்புணர்வு நிகழ்சி



 


(எம். என்.எம்.அப்ராஸ்)


வர்த்தக,வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நூகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை உயர்தரப் பிரிவு மாணவர்கள் மத்தியில் நூகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடசாலை அதிபர் .ஏ.ஆர்.எம்.உவைஸ் தலைமையில் மற்றும் வர்த்தக கலை பிரிவு பகுதித் தலைவர் கியாஸ் வழிகாட்டலில் இன்று (07)இடம்பெற்றது. 

இதன் போது நூகர்வோர் உரிமைகள்,
பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது. இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் முஹம்மட் ஸாஜீத் ஸமான் மற்றும் கலந்து கொண்டார். மேலும் உயர் தரப்பிரிவு வர்த்தக பிரிவு ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.