இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை இராணுவத்திற்கு நன்கொடையாக வழங்கிய 20 புதிய ஜீப் வாகனங்களின் பயன்பாட்டின் மூலம், இலங்கை இராணுவம் மாதத்திற்கு 1.5 மில்லியன் ரூபாவை சேமிக்க கூடியதாகவுள்ளது.
இரு இராணுவத் தளபதிகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் அடையாளமாக, இந்திய இராணுவ பிரதானியின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இந்தத் ஜீப் வாகனங்கள் இலங்கை இராணுவத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
நிர்வாக மற்றும் களப் பணிகளுக்காக தனியார் துறையிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு இராணுவம் மாதத்திற்கு ரூ. 1.5 மில்லியன் (ரூபா 15 இலட்சம்) செலவிட வேண்டியிருந்தது.
இந்தப் புதிய ஜீப் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம், அந்த வாடகை வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ. 18 மில்லியனுக்கும் அதிகமாக பணத்தை மீதப்படுத்தப்பட்டுள்ளது.
(வா. சுதர்ஸ்சன்)


Post a Comment
Post a Comment