உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் நிழல் உலக அதிகாரம் வீழ்ந்ததா?
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மிகப்பெரிய திருப்பமாக, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே இன்று (25-02-2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி நடவடிக்கை, கடந்த பல ஆண்டுகால அரசியல் மர்மங்களை உடைக்குமா?
இதேவேளை ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா என்பவர், சுரேஷ் சாலே தொடர்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.
எனினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால், அவர் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கைதான அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அவர் கைதானார்.
இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment