பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை



 


நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவைகள் அமைப்புகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன மற்றும் ஒழுங்கற்ற சிகை அலங்காரங்களைச் செய்யாமல் இருப்பதற்கு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.