உலக உயர் குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இணைந்து கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி .ஜாமல்தீன் உடப்பட சங்கத்தின் உறுப்பினர்களின் உதவியுடன் பொது சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உயர் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் இன்று (17)இடம் பெற்றது.
இதன் போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன்,கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என்.ரமேஷ்,கல்முனை தெற்கு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின்,கல்முனை வடக்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி பே. கேதுஜன்,மேற்ப்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான ஜே.எம்.நிஜாமுதீன்,ஜே.எம். நிஸ்தார் பொது சுகாதார பரிசோதகர்களான எம். ஜூனைதீன், கே.எல்.மன்சூர்,எஸ்.ஜோகநாதன், ஆர்.எம்.முஹ்சீன் ஆகியோர் மேற் குறித்த உயர் குருதி அழுத்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
M.N.M.Afras

Post a Comment
Post a Comment