களமெட்டிய கடலில் மூழ்கிய சிறுவர்களின் சடலங்கள் மீட்பு




ஹம்பாந்தோட்டை ஹூங்கம – களமெட்டிய கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று சிறுவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடலில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.