பருத்தித்துறை கடலுக்குச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக இந்தியாவின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் ராடார் கண்காணிப்பு மூலம் உள்ளூர் கடற்பரப்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீனவர்கள் கண்டறியப்படாததால், இந்தியத் தூதரகம் ஊடாக இந்திய கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனுமதி மற்றும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், சர்வதேச கடற்பரப்பிலும் தேடுதல் மேற்கொள்ள தனியார் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment