வெல்லவாவில் ஒரே வீட்டில் இரு உடல்கள் மீட்பு




 வெல்லவ, நிக்கதலுபொத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்யொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அதே வீட்டில் ஆண் ஒருவரும் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளார்.


இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.