சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் -2000 ஆயிரம் பேர் பங்கேற்பு



 


ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்          
 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுத்த சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (21) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச உதவிப்பிரதேச செயலாளர்களான சுபாகர் மற்றும் பிரணவரூபன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சர்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் அதிபர்கள் ஆலய தலைவர்கள் சமூக அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் மாணவர்களின் நடன கலைநிகழ்வுகளோடு வரவேற்க்கப்பட்டு தேசிய கொடியேற்றப்பட்டு சர்வதேச யோகா தின உறுதி மொழி வாசிக்கப்பட்டு யோகா பயிற்சி நெறி ஆரம்பமானது.
 இதில் 2000 ஆயிரம் வரையிலான மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யோகா தின ஒழுங்குகள் தொடர்பாகவும் பாடசாலைகள் ஆலயங்கள் சமூக அமைப்புக்கள் வழங்கிய ஒத்துழைப்பு பங்களிப்பு தொடர்பிலும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் குறிப்பிட்டார்
இறுதியில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மாவட்ட யோகா தின ஏற்பாடுகளை சிறப்பு முன்னெடுத்த பிரதேச செயலாளர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறினார்.
அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் காலத்திலும் சிறந்த முறையில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தரின் சேவையினை பாராட்டி பிரதேச செயலாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.