வி.ரி.சகாதேவராஜா)
அக்கரைப்பற்று வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 1ஐச் சேர்ந்த சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பிஎம்.யாசீர் அரபாத் உத்தியோகபூர்வமாக இன்று (1) திங்கள் கிழமை கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்டிருந்த
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரான இவர் நேர்முக தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்று இப்புதிய நியமனத்தை பெற்றுள்ளார்.
அக்கறைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பௌஸ் தலைமையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் சஹதுல் நஜீம் உட்பட கல்வி அதிகாரிகள், அவரது மனைவி குடும்பத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மருதமுனை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
.jpg)

Post a Comment
Post a Comment