நாடாளுமன்ற ஓய்வுநிலை உரைபெயர்ப்பாளர், ராகுலன் மறைவு



 

அமரர் ராகுலன் பாராளுமன்றத்தில் பிரதம உரை பெயர்ப்பாளராகவும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் மற்றும் ஜனாதிபதி ஊடகத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் [Director, Presidential Communication/Former Director of Legislator Services in Parliament & Chief Parliament Interpreter] கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பிறப்பில் மலையாளியாகத் திகழ்ந்த அமர் ராகுலன், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் சரளமாக உரையாடக் கூடியவராகவும், மும்மொழிகளிலும் உரைபெயர்க்கக்கூடியவராகவும் இருந்தார். அவர் ஸ்ரீ நாராயண குரு சங்கத்தின் தலைவராக கடமையாற்றி, இலங்கையில் வாழும் மலையாள சமூகத்தை வழிநடத்தக்கூடிய பாத்திரத்தையும் திறம்பட வகித்திருந்தார்.
அரச பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில், தமது 81ஆவது வயதில் அவர் நேற்று காலமானார்.