சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இன்று (ஜூலை 2) தவெகவில் இணைந்தனர்.
இதற்கான நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ரமேஷ், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
.webp)

Post a Comment
Post a Comment