கதிர்காமத்திற்கான விசேட பஸ் சேவைகள்- இன்றைய தினத்தில் இருந்து ஆசனப் பதிவுகள்



 

மட்டக்களப்பு இ.போ.சபையினால் உகந்தை, கதிர்காமத்திற்கான விசேட பஸ் சேவைகள்-  இன்றைய தினத்தில் இருந்து ஆசனப் பதிவுகள் ஆரம்பம்!


கதிர்காமம் மற்றும் உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடி வேல்விழா மற்றும் பாதயாத்திரையை முன்னிட்டு, மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபையினரால் (இ.போ.ச) விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


​இவ்விசேட போக்குவரத்துச் சேவைக்கான முன்பதிவு (ஆசனப் பதிவுகள்) இன்றைய தினத்தில் (04.07.2026) இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சாலை முகாமையாளர் அறிவித்துள்ளார்.