மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியது



 


மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்


 (கனகராஜா சரவணன்)



மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று செவ்வாய்க்கிழமை (7) அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றிய தையடுத்து மட்டு மாநகர சபை தீயணைப்பு பிரிவு பொலிஸ் தீயணைப்பு பிரிவுள் இணைந்து  4 மணித்தியாலம் போராட்டத்தின் பின்னர் காலை 9.00 மணிக்கு  பாரிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அங்கு பெரும் பரபரப்பு-


இருந்தபோதும் சென்றல் வீதியில் உள்ள சிறுவர் ஆடை விற்பனை கடை தொகுதி மற்றும் பஸார் வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி திருத்தும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் தங்க ஆபரண கடைகள் உட்பட 5 கடைகள் சேதமேற்பட்டதுடன் இந்த இருவீதிகளும் தற்காலிகமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது



இந்த தீ விபத்து தொடர்பாக மட்டு தலைமையக பொலிசா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.