எம். எச் .எம் .அன்வர்-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மர்ஹூம் எம் ஐ எம் இர்பான் அவர்களுக்கான நினைவுப்பகிர்வு நிகழ்வு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மர்ஹூம் எம் .ஐ .எம் .இர்பான் சம்மேளன பிரதிச் செயலாளர் அவர்களுக்கான நினைவுப்பகிர்வு நிகழ்வு( 02 )இன்று சம்மேளன மண்டபத்தில் பிரதித்தலைவர் எம்.சீ.எம். ஏ. சத்தார் சேர் தலைமையில் இடம்பெறுகிறது.
இந்நிகழ்வில் சம்மேளன உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மர்ஹூம் இர்பான் அவர்களின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டனர்.
மர்ஹூம் இர்பான் அவர்களின் கடந்த கால பணிகள் அவரால் சம்மேளனத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக இங்கு உரையாற்றப்பட்டன.
-எம். எச் .எம் .அன்வர்-
02.08.2026


Post a Comment
Post a Comment