தெலியாகொண்ண ஹிஸ்புல்லா கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியல்



குருநாகல் கண்டி பிராதன வீதியினை இடைமறித்து தெலியாகொண்ண பகுதியில் ஹிஸ்புல்லா கல்லூரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஸ்புல்லா கல்லூரியின் அதிபரை இடமாற்ற வேண்டாமெனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
குருநாணகல் வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வர முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை
தற்போது குருநாகல் கண்டி பிரதான வீதியின் தெலியாகொண்ணை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.