அமைச்­சர்கள், முத­ல­மைச்­சர்­களை ஜனா­தி­பதி இன்று சந்­திக்­க­வுள்ளார்



ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள் மற்றும் முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்பு ஒன்று இன்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.
இந்த சந்­திப்­பின்­போது நாட்டின் அர­சியல் பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
குறிப்­பாக எதிர்­வரும் காலங்­களில் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள வேலைத்­திட்­டங்கள் மற்றும் திட்­ட­மி­டல்கள் தொடர்பில் இதன்­போது ஜனா­தி­பதி மக்கள் பிர­தி­நி­திகள் மத்­தியில் விசேட உரை­யாற்­றுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
அத்­துடன் நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நிதி நெருக்­கடி தொடர்­பா­கவும் இந்த நிகழ்வில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.
இந்த நிகழ்வின் இறு­தியில் அமைச்­சர்கள் இரா­ஜாங்க அமைச்­சர்கள் பிர­தி­ய­மைச்­சர்கள் மற்றும் முத­ல­மைச்­சர்­க­ளுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இரா­சப்­போ­சன விருந்­த­ளிக்­க­வுள்ளார்.