தொலைபேசி, மருத்துவ ஆலோசனை, மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் – JVP



தேசிய அர­சாங்கம் அப்­பாவி மக்­களின் வயிற்றில் அடித்­து­விட்­டது. வற் வரி 15 வீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­டு­வதன் கார­ண­மாக தொலை­பேசி கட்­ட­ணங்­களும் தனியார் மருத்­துவ ஆலோ­சனை சேவை கட்­ட­ணங்­களும் பாரி­ய­ளவில் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன.
மருந்து வகை­களின் விலை­களும் உயர்­வ­டையும். இதன்­மூலம் சாதா­ரண மக்­களே பாரி­ய­ளவில் பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.
மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் உள்­ளிட்ட அனைத்து பொருட்கள் சேவை­க­ளி­னதும் விலை­களும் கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கப்­படும் அபாயம் உள்­ளது. நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு புதிய அர­சாங்­கமும் மக்­களை பொரு­ளா­தார சுமைக்குள் தள்­ளி­வி­டு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார்.
மே மாதம் 2 ஆம் திக­தி­யி­லி­ருந்து வற் வரி­யா­னது 15 வீத­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.