மன்னார் - தள்ளாடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மதகுரு மற்றும் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதகுரு பலியாகியுள்ளார்.
இவர் இலங்கை பெந்தகோஸ்து சபையைச் சேர்ந்த பாதிரியார் எனத் தெரியவந்துள்ளது.

