அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியான வற் வரி இன்று இரண்டாம் திகதி திங்கட்
கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இது வரைக்காலமும் அறவிடப்பட்டு வந்த 11 சதவீதமான பெறுமதி சேர் வரி இன்று முதல் 15 சதவீதமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரை பெறுமதி சேர் வரிக்கு உள்ளடக்கப்படாத மின்சார கட்டணத்திற்கு எதிர்வரும் காலத்திலும் இவ்வரி உள்ளடக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இது வரைக்காலமும் வற்வரி விலக்களிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள், தொடர்பாடல் சாதனம் அல்லது இயந்திரங்கள், உயர் தொழில்நுட்ப சாதனங்கள் , தொடர்பாடல் துறைக்கும், சுகாதார சேவை, நீர்கட்டணம் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணம் ஆகியவற்றிற்கும் குறித்த வற் வரி அதிகரிப்பு தாக்கம் செலுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருந்து பொருட்களுக்கு வற்வரி அறிவீடு மேற்கொள்ளப்படாத நிலையில் தனியார் துறை சுகாதார சேவைக்கு வற் வரி சீர்த்திருத்தம் தாக்கம் செலுத்தும் என நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

