இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஆரம்பித்தது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

