அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் காணப்படும் மக்களின் சுக துக்கங்களை விசாரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை அங்கு சென்றுள்ளார்.
அரநாயக்க தேபத்கம விகாரைக்கு அவர் முதலில் சென்றுள்ளார். இதன்போது, அங்கு இடம்பெயர்ந்து காணப்பட்ட மக்களிடம் பிரதமர் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

