உலக புகைத்தல் எதிர்ப்பு தின வைபவம்



உலக புகைத்தல் எதிர்ப்பு தின வைபவம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்துக்கு இணைவாக இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் ஜனாதிபதியால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, பிரதியமைச்சர் பைசல் காசிம், ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.