பயிற்சி பட்டறை



(க.கிஷாந்தன்)

368 ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சி பட்டறை உத்தியோகப்பூர்வமாக 03.06.2016 கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கலாசாலையின் திருத்த பணிக்காக 1 கோடி 33 இலட்சம் ரூபா நிதி கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கடிதம் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனினால் கலாசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.