கல்வி, சுகாதாரத்துறை என்பன சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது



இலங்கையின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மிலாகிரிய புனித போல் மகளிர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மிலாகிரிய புனித போல் மகளிர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
இங்கு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்துடன் ஆசிரியர்களின் சேவைகளைப் பாராட்டி அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.