(சுஹைப் உமறுலெப்பை)
சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான இஸ்மாயில் உ வைசுர் ரஹ்மானின் வேண்டு கோளின் பேரில், ADSSO அம்பாரை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில், 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான இலவச முன்னோடிக் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று வலயப் பாடசாலை மாணவர்கள் பயன் பெறும் வகையில் - 2016 இவ்வருடம் தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவ, மாணவியர்களின் நலன்கருதி, அக்கரைப்பற்று மாநகர அதாஉல்லாஹ் அரங்கிலே,இன்று ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 08.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 02.30 மணி வரை, பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடலுடன் ஆரம்பமாகி இனிதே நடை பெற்றது.


