இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்




இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து 05 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. 

எனினும் தனஞ்ச டி சில்வா மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர். 

தொடர்ந்து களத்தில் ஆட்டமிழக்காதிருக்கும் தனஞ்ச டி சில்வா சற்று முன்னர் வரை 104 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 56 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறும்.