ஹிலாரி - டிரம்ப் இடையே நேரடி விவாதம் துவங்கியது



நியூயார்க் : 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையேயான முதல் நேரடி விவாதம் துவங்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 8ல் நடைபெறுகிறது. இதில் களம் காண குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில், ஹிலாரி - டிரம்ப் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி துவங்கியது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் விவாதம் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது.


விவாதத்தில் ஹிலாரி பேசியதாவது:
* குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும்
* நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அமல்படுத்தப்படும்
* புதிய திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
* பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே டிரம்ப் ஆதரவளிப்பார்
* வரிச்சலுகைகளை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும்


விவாதத்தில் டிரம்ப் பேசியதாவது:
* அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனர்களும், மெக்ஸிகர்களும் தட்டிப் பறிக்கின்றனர்.
* அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும்
* வெளியுறவு அமைச்சராக இருந்த போது ஹிலாரி அமெரிக்காவின் நிலையை உயர்த்தவில்லை
* வரிச்சலுகை மூலம் மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தப்படும்