ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க நிராகரித்துள்ளார்.
றக்பி வீரர் வசீம் தாஜுதீன் சடலத்தின் பாகங்கள் காணமல் போன விடயம் தொடர்பில் தன்னை பொலிஸார் கைது செய்யாமல் இருப்பதற்காக குறித்த முன்பிணை கோரிக்கையை ஆனந்த சமரசேகர முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், குறித்த முன் பிணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் முன்பிணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

