WHO தெற்கு,கிழக்காசிய வலய வருடாந்த அமர்வின் தலைவராக ராஜித



உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயத்தின் 69 ஆவது வருடாந்த அமர்வின் தலைவராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நியமிக்கப்பட்டார்.
15 நாடுகளை பிரிநிதித்துவப்படுத்தி 250ற்கும் அதிகமானவர்கள் இந்த அமர்வில் கலந்து கொணடிருந்தனர்.
எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலயத்தின் 69 ஆவது வருடாந்த அமர்வின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது