கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக 200 விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வருடம் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் காரணமாக இந்த விமானங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன. இதனால் சுமார் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

