அனுமதிப்பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன




எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ள பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் தற்போதைய நிலையில் , குறித்த அதிபர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , இதுவரை அனுமதி பத்திரம் கிடைக்கவில்லையென்றால் 1911 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கோ அல்லது பாடசாலை பரீட்சைகள் அமைப்பு அல்லது பெறுபேறுகள் சபைக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.



எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 1217 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் , ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 834 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்