சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைக்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது டயாலஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்திலும் நிமோனியா தாக்கத்திற்கு உள்ளான நிலையில் அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

