பண வவுச்சருக்கு பதிலாக மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கினார் என்ற குற்றசாட்டில் நேற்று திடீர் பணிநீக்கம் செய்யப்பட்ட கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் பாடசாலை அதிபரை மீண்டும் உடனடியாக பணியில் அமர்த்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.
#Suspended.
கண்டி, பதியூதின் மஹமூத் மகளிர் கல்லூரியின் அதிபர், நேற்று 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, கல்லூரியின் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளுக்கான வவுச்சர்களை, மாணவிகளுக்கு வழங்காமல் தனிப்பட்ட ஒரு நிறுவனம் மூலம் சீருடைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுடில், மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில், இதுதொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்விதிகளை கடைப்பிடிக்காமையே, இவரது பணி நீக்கத்துக்கு முக்கிய காரணம் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

