இராணுவ வர்ண இரவு 2017



-ஜே.ஏ.ஜோர்ஜ் -
இராணுவ விளையாட்டு வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் வர்ண இரவு 2017, கொழும்பு தாமரை தடாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 2015 - 2016 ஆம் ஆண்டில் படைப்பிரிவு நிலை, பாதுகாப்பு படைகள், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்குப்பற்றி சிறந்த திறமையை வெளிக்காட்டிய இராணுவ வீர, வீராங்கனைகள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.