ஆலையடிவேம்பில் அறு பேருக்கு டெங்கு



-வி.சுகிர்தகுமார்-
ஆலையடிவேம்பில் 6 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு  புகை விசிறும் நடவடிக்கை  திங்கட்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டது. வாச்சிக்குடா, மகாசக்திபுரம், அக்கரைப்பற்று ஆகிய பிரிவுகளிலேயே  புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.