அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , குடியேற்றத் தடை உத்தரவை ஏற்க மறுத்த அரச தலைமை வழக்கறிஞரை பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
சேலி யேட்ஸ் என்ற அந்த அரச தலைமை வழக்கறிஞர் டொனால்ட் டிரம்ப் உத்தரவுக்கு பணிய மறுத்த தலைமை வழக்கறிஞர் நீக்கம்ரம்ப் நிர்வாகம் அறிவித்த குடியேற்றத்தடை உத்தரவின் சட்டபூர்வத் தன்மை குறித்த வழக்குகளில், அரசுக்கு ஆதரவாக வாதாட வேண்டாம் என்று அமெரிக்க நீதித்துறையில் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குள், பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
சேலி யேட்ஸ் , முந்தைய அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யேட்ஸ் அம்மையார் நீதித்துறைக்கு ''துரோகம்'' செய்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது.
வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க அரச வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் டானா பொயண்ட்டே இப்போது தற்காலிக அரச தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

