சாந்தனின் உடல் இரணைமடுவில் தகனம்



-நடராசா கிருஸ்ணகுமார்-
 மறைந்த பாடகன் சாந்தனின் இறுதி நிகழ்வு, பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி, இரணைமடு பொது மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. ஈழத்து  எழுச்சிப் பாடகன் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கத்தின் இறுதி நிகழ்வு, அவரது  கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில், பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்று, இரணைமடு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.