-எம்.எஸ்.எம்.ஹனீபா-
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான ஆதம்பாவா சம்சுனா (வயது 36) என்பவர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார் என அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இவர் செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

