மினுவாங்கொட, புளுகஹமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்து கொங்ரீட் கம்பம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மற்றும் 34 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதுடன், மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment