மட்டக்களப்பு – ஏறாவூர் 4 ஆம் குறிச்சியில், வீட்டு மதில் சரிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
சசோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமி மீது இன்று பகல் மதில் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த மதில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே கட்டப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அனர்த்தத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


Post a Comment
Post a Comment